கால்பந்துப் போட்டி: மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி

மாநில அளவிலான கால்பந்து போட்டியில் பங்கேற்க கோத்தகிரியில் பள்ளி மாணவர்களுக்கு சனிக்கிழமை தீவிரப் பயிற்சி அளிக்கப்பட்டது.

மாநில அளவிலான கால்பந்து போட்டியில் பங்கேற்க கோத்தகிரியில் பள்ளி மாணவர்களுக்கு சனிக்கிழமை தீவிரப் பயிற்சி அளிக்கப்பட்டது.
கோவை வடவள்ளி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் மாநில அளவிலான கால்பந்து போட்டி நடைபெற உள்ளது. இதில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 10 வயதுக்கு உள்பட்ட மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இதற்காக, நீலகிரி மாவட்டத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு கோத்தகிரி காந்தி மைதானத்தில் சனிக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது. சத்தியகாத்தி கால்பந்து அகாதெமியின் பயிற்றுநர்களால் மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com