மசினகுடி பகுதியில் பள்ளிக்குச் செல்லாமல் ஆடுமேய்க்கச் சென்ற பழங்குடி மாணவர்களை, போலீஸார் அழைத்துச் சென்று திங்கள்கிழமை பள்ளியில் சேர்த்தனர்.
மசினகுடி, மாயாறு சாலை குரூப் ஹவுஸ் பகுதியில் வசிக்கும் இரண்டு மாணவர்கள் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு ஆடுமேய்க்கச் சென்றுள்ளனர். இதையறிந்த மசினகுடி
போலீஸார் இவர்கள் இருவரையும் பிடித்து அறிவுரை கூறி மசினகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் 6, 9-ஆம் வகுப்புகளில் சேர்த்தனர்.