பழங்குடி மக்களுக்கு நலத்திட்ட உதவி

கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பகுதியிலுள்ள பழங்குடி மக்களுக்கு காவல் துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பகுதியிலுள்ள பழங்குடி மக்களுக்கு காவல் துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
 நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பாவின் உத்தரவின்பேரில், காவல் துறையினர் பழங்குடி கிராமங்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர்.
 இதில் ஒரு பகுதியாக, ஓவேலி பேரூராட்சியில் உள்ள எல்லமலை, குரும்பர்பாடி கிராம மக்களுக்கு காவல் துறை சார்பில் குடைகள் வழங்கப்பட்டன.
 இந்நிகழ்ச்சியில், உதவி ஆய்வாளர் ராஜேஷ், பயிற்சி உதவி ஆய்வாளர் உதயகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com