கூடலூரை அடுத்துள்ள ஏச்சம் வயல் கிராமத்தில் தென்னை, பாக்கு மரங்களை யானைகள் வெள்ளிக்கிழமை இரவு சேதப்படுத்தின.
ஏச்சம் வயல் கிராமத்துக்குள் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் நுழைந்த 20-க்கும் மேற்பட்ட யானைகள் அப்பகுதியைச் சேர்ந்த ஜோய், பிஜூ, அபிஷேக் ஆகியோரது தோட்டத்தில் இருந்த தென்னை, வாழை, பாக்கு உள்ளிட்டவற்றைச் சாப்பிட்டுச் சேதப்படுத்தியுள்ளன. யானைகளால் சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.