தென்னை மரங்களைச் சேதப்படுத்திய யானைகள்

கூடலூரை அடுத்துள்ள ஏச்சம் வயல் கிராமத்தில் தென்னை, பாக்கு மரங்களை யானைகள் வெள்ளிக்கிழமை இரவு சேதப்படுத்தின.

கூடலூரை அடுத்துள்ள ஏச்சம் வயல் கிராமத்தில் தென்னை, பாக்கு மரங்களை யானைகள் வெள்ளிக்கிழமை இரவு சேதப்படுத்தின.
ஏச்சம் வயல் கிராமத்துக்குள் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் நுழைந்த 20-க்கும் மேற்பட்ட யானைகள் அப்பகுதியைச் சேர்ந்த ஜோய், பிஜூ, அபிஷேக் ஆகியோரது தோட்டத்தில் இருந்த தென்னை, வாழை, பாக்கு உள்ளிட்டவற்றைச் சாப்பிட்டுச் சேதப்படுத்தியுள்ளன. யானைகளால் சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com