நீலகிரி மாவட்டம், குன்னூர், வெலிங்டன் ராணுவ முகாமில் போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம், வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் ராணுவ முகாம் சார்பில் போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், போர் நினைவுத் தூணில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
முன்னதாக மெட்ராஸ் ரெஜிமென்டின் பேண்ட் குழுவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ராணுவ உயர் அதிகாரிகள் மட்டுமல்லாமல், போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினரும் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மெட்ராஸ் ரெஜிமென்டின் தலைமை தளபதி லெப்டினென்ட் ஜெனரல் ராஜீவ் சோப்ரா, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, ஏராளமான முன்னாள் ராணுவ வீரர்கள் அஞ்சலி செலுத்தினர்.