தொடர் விடுமுறை: முதுமலையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

தொடர் விடுமுறை காரணமாக  முதுமலை புலிகள் காப்பகத்தில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.

தொடர் விடுமுறை காரணமாக  முதுமலை புலிகள் காப்பகத்தில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் அண்மைக்காலமாக பெய்த பலத்த மழை காரணமாக முதுமலை புலிகள் காப்பகம் உள்ளிட்ட சுற்றுலாப் பகுதிகள் பசுமை நிறைந்து காணப்படுகின்றன. இந்நிலையில், தொடர் விடுமுறை காரணமாக  முதுமலை புலிகள் காப்பகத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்தது.
இங்கு சுற்றித் திரியும் வன விலங்குகளை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர். மேலும்,  முதுமலை புலிகள் காப்பகத்தில் யானை சவாரி செய்ததுடன், அருங்காட்சியகத்தையும் கண்டு களித்தனர்.
 சுற்றுலாப் பயணிகளின் வருகையால் வனத் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com