சுற்றுலா, லாரி ஓட்டுநர் உரிமையாளர்கள் சங்கம் வேலைநிறுத்தம்

இடைத்தரகர்களால் இடையூறு ஏற்படுவதாகக் கூறி வட்டாரப்  போக்குவரத்து அலுவலகத்தைக் கண்டித்து சுற்றுலா, லாரி ஓட்டுநர் உரிமையாளர்கள் சங்கம்

இடைத்தரகர்களால் இடையூறு ஏற்படுவதாகக் கூறி வட்டாரப்  போக்குவரத்து அலுவலகத்தைக் கண்டித்து சுற்றுலா, லாரி ஓட்டுநர் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 நீலகிரியில் உள்ள வட்டாரப் போக்குவரத்துக் கழக அலுவலகத்தில் இடைத்தரகர்கள் ஆதிக்கம் அதிகம் உள்ளது. அதிகாரிகள் இடைத்தரகர்களுக்கு துணைப் போவது கண்டனத்துக்கு உரியது. அசல் ஓட்டுனர் உரிமம் தொலைந்துபோனால் புதிதாக ஓட்டுநர் உரிமம்  எடுப்பதற்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தைக் காட்டிலும்  கூடுதலாகக் கட்டணம் வசூலிப்பது கண்டனத்துக்குரியது என வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.
 போராட்டத்தில், குன்னூரில் உள்ள 500-க்கும் மேற்பட்ட லாரி, சுற்றுலா வாகன ஓட்டிகள் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில்  ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com