கேரள எல்லையில் மாவோயிஸ்ட் தேடுதல் வேட்டை

நீலகிரி மாவட்டத்தில் உள்ள  கேரள  எல்லையில்  மாவோயிஸ்ட் தேடுதல் வேட்டையில் நக்ஸல் தடுப்புக்  காவல் படையினர்  வியாழக்கிழமை ஈடுபட்டனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள  கேரள  எல்லையில்  மாவோயிஸ்ட் தேடுதல் வேட்டையில் நக்ஸல் தடுப்புக்  காவல் படையினர்  வியாழக்கிழமை ஈடுபட்டனர்.  
கேரள மாநிலம்,  அகழியில் காளிதாஸ் என்ற  மாவோயிஸ்ட் கடந்த சில நாள்களுக்கு முன்  கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து ,  நீலகிரி மாவட்டத்தில் உள்ள கேரள எல்லையான வீரான் கொம்பை, மல்லன் தோட்டம், பெரும்பள்ளம்,  முள்ளி உள்ளிட்ட  பகுதிகளில் நக்ஸல் தடுப்புக்  காவல் படையைச் சேர்ந்த  7 வீரர்கள் வியாழக்கிழமை தேடுதல் வேட்டையில்  ஈடுபட்டனர்.
அப்போது,  புதிய  நபர்களின்  நடமாட்டம் குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்  என்று மலைவாழ் மக்களிடம் அவர்கள் அறிவுறுத்தினர். நீலகிரி,  கேரள எல்லையில்  உள்ள மலைக் கிராமங்களில் தொடர்ந்து இரண்டு நாள்கள்  தீவிர ரோந்துப் பணியில் இவர்கள் ஈடுபட உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com