கூடலூர் நகரில் சாலையோரத்தில் குப்பைகளைக் கொட்டிய ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.
கூடலூர் சின்ன பள்ளிவாசல் தெருவில் ஆட்டோவில் புதன்கிழமை வந்த இருவர் அங்கு, சாலையோரத்தில் குப்பைகளைக் கொட்டினர்.
இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் அந்த ஆட்டோவை சுற்றி வளைத்துப் பிடித்து நகராட்சி சுகாதார மேற்பார்வையாளர் ரமேஷிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து ஆட்டோவை பறிமுதல் செய்த சுகாதார மேற்பார்வையாளர் ரமேஷ் ஆட்டோவில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்.