மத்திய அரசைக் கண்டித்து கூடலூரில் காங்கிரஸ் கட்சியினர் புதன்கிழமை ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர்.
கூடலூர் புதிய பேருந்து நிலையம் சந்திப்பில் நடைபெற்ற ஆர்ப்பட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் கோஷி பேபி தலைமை வகித்தார். மாநில சிறுபான்மை அணித் தலைவர் அஸ்லாம் பாஷா சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார்.
முன்னதாக சிறுபான்மை அணி சார்பில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்துக்கு மாவட்ட சிறுபான்மை அணித் தலைவர் இந்திரா செயதலவி தலைமை வகித்தார்.
மாநில ஒருங்கிணைப்பாளர் சபி, மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் அனஸ் எடாலத், மாவட்ட துணைத் தலைவர் அம்சா, தாலூகா தலைவர் சளிவயல் ஷாஜி, அசரப், நகரத் தலைவர்கள்அப்துபா, கோபி, நிர்வாகிகள் பி.கே.மொய்துபா, சிவா, தாமஸ், முகமது ரபீக், எஸ்.கே.ராஜு, சுல்பிகரலி, சிவராஜ், சம்சுதீன், உசைன், ஜோஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.