குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக வெள்ளிக்கிழமை மழை பெய்தது.
குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில், குன்னூர் உள்ளிட்ட பல இடங்களில் பரவலாக மழை பெய்தது.
இதன் காரணமாக அங்குள்ள சுற்றுலாத் தலங்களுக்கு வந்திருந்த பொதுமக்கள் தங்கும் விடுதிகளுக்கு திரும்பிச் சென்றனர். மழையுடன் குளிரும் அதிகம் காணப்படுவதால் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டது.