குன்னூரில் நாய்கள் கண்காட்சி தொடக்கம்

நீலகிரி கெனல் கிளப் சார்பில் இரண்டு நாள்கள் நடைபெறும் நாய்கள் கண்காட்சி சனிக்கிழமை தொடங்கியது.

நீலகிரி கெனல் கிளப் சார்பில் இரண்டு நாள்கள் நடைபெறும் நாய்கள் கண்காட்சி சனிக்கிழமை தொடங்கியது.
நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வோர் ஆண்டும் கோடை சீசன், 2-ஆவது சீசன் காலங்களில் நாய்கள் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். நீலகிரி கெனல் கிளப் சார்பில் 2 நாள்கள் நாய்கள் கண்காட்சி குன்னூர், கன்டோண்மென்ட் மைதானத்தில் தொடங்கியது.
காவல் துறை, ராணுவம், ரயில்வே காவல் நிலையங்களில் குற்றங்களைக் கண்டறிய பயன்படுத்தப்படும் ஜெர்மன் ஷெப்பர்டு நாய்கள் கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சயில், கட்டளைகளுக்கு கீழ்படிதல், மோப்பத் திறன், நாய்களின் ரகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
கண்காட்சியின் நடுவர்களாக மும்பையைச் சேர்ந்த அஞ்சலி, பெங்களூருவைச் சேர்ந்த திருவடி ஆகியோர் பங்கேற்றனர். சிறந்த நாய்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
ஞாயிற்றுக்கிழமை உயர்தரமான டாபர்மேன் போன்ற வீட்டில் வளர்க்கக் கூடிய பல்வேறு வகையான நாய்கள் கண்காட்சி நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com