தென்னிந்திய தோட்ட அதிபர்களின் 124-ஆவது மாநாடு கருதரங்கு குன்னூரில் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த ரப்பர், காபி, தேயிலை, வாசனை திரவியங்களின் தோட்டத் தொழிலதிபர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் கென்யா, இந்தோனேசியா, உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
மாநாட்டின் நிறைவு நாளான வியாழக்கிழமை வனம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.
இதில், கோவை மண்டல வன அலுவலர் ராமசுப்பிரமணி, மத்திய வனப் பாதுகாவலர் சத்ரியன், இந்தியத் தேயிலை வாரியத் தலைவர் பிரபாத் பேஸ்புஷ்வா, டேன் டீ பொது மேலாளர் அசோக் உப்புருட்டி ஆகியோர் பங்கேற்றுப் பேசினர்.