இலவச மருத்துவ முகாம்

ஓவேலி பேரூராட்சி சார்பில் இலவச மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஓவேலி பேரூராட்சி சார்பில் இலவச மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவின்பேரிலும், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் பா.ராஜகோபாலின் அறிவுரையின்படியும், ஓவேலி பேரூராட்சியும், பார்வுட் அரசு ஆரம்ப சுகாதார நிலையமும் இணைந்து எல்லமலை கிராமத்தில் இலவச மருத்துவ முகாமை நடத்தின. மருத்துவ அலுவலர் யோகேஸ்வரன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர். பேரூராட்சியின் செயல் அலுவலர் எம்.என்.வேணுகோபால், பணியாளர்கள் கலந்துகொண்டனர். இதில், எல்லமலை சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள பொதுமக்கள் கலந்துகொண்டு பன்பெற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com