குன்னூர் தீயணைப்புத் துறை சார்பில், தீத் தொண்டு வார விழிப்புணர்வு விழா திங்கள்கிழமை நடந்தது.
குன்னூர் சித்தி விநாயகர் கோயில் தெரு பகுதியில் துவங்கிய நிகழ்ச்சியை தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் அர்ஜுனன் துவக்கி வைத்தார். இதில் தீயணைப்பு வீரர்கள் ஜெகதீஷ் சந்திரபோஸ், சுப்ரமணி, ராமச்சந்திரன், கிருஷ்ணமூர்த்தி, ஸ்கந்தகுரு, பாலமுருகன், மனோஜ்குமார் ஆகியோர் செயல்முறை விளக்கம் அளித்தனர். வீட்டில் ஏற்படும் தீயை அணைக்கும் முறைகள், விபத்தில் காயங்கள் ஏற்பட்டால் அவர்களை தூக்கிச் செல்லும் முறைகள் குறித்து விளக்கப்பட்டது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.