காஷ்மீரில் படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு நீதி வழங்கக் கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் ஞாயிற்றுக்கிழமை இரவு கூடலூரில் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கூடலூர் புதிய பேருந்து நிலையம் சந்திப்பில் துவங்கிய பேரணி முக்கியச் சாலை வழியாக காந்தி திடலை வந்தடைந்தது. அங்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் கோஷி பேபி தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் கே.பி.முகமது, எஸ்.கே.ராஜூ, சுல்பி, பாட்டசேரி பாபு, சிவராஜ், ரஃபீக், மாவட்ட நிர்வாகி அம்சா, நகர தலைவர் அப்துப்பா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.