கூடலூரில் மகளிர் பார்வை நாள் மற்றும் பிரார்த்தனை நிகழ்ச்சி வரும் 22-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
கூடலூரில் உள்ள முஸ்லிம் ஆதரவற்றோர் இல்லத்தில் ஆண்டுதோறும் மகளிர் பார்வை நாள் மற்றும் பிரார்த்தனை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு பிராத்தனை நாள் நிகழ்ச்சிக்கான ஏற்படுகளை ஜீ.டி.எஸ்.ஓ. கல்வி நிறுவன வளாகத்தில் அதன் நிர்வாகிகள் செய்து வருகின்றனர். இதில், தென் இந்தியாவின் பல பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் கலந்துகொள்வார்கள். சுமார் 50 ஆயிரம் பேர் அமர்ந்து உணவு சாப்பிடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருவதாக இந்தக் கல்வி நிறுவனத்தின் தலைவர் கே.பி.முகமது, செயலாளர் அப்துல் பாரி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.