கூடலூர் அரசுப் பள்ளியில்  தூய்மை இந்தியா உறுதிமொழி

கூடலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தூய்மை இந்தியா உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூடலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தூய்மை இந்தியா உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் பள்ளி வளாகத்தில் தூய்மை இந்தியா திட்டம் தலைமை ஆசிரியர் ராபர்ட் தலைமையில் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் தூய்மை இந்தியா திட்ட உறுதிமொழியேற்றனர்.தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் சுரேஷ்குமார் முன்னிலையில் உடற்கல்வி இயக்குநர் ராஜேஷ், ஆசிரியை டெய்சி விமலா ராணி மற்றும் மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com