கூடலூர் - ஓவேலி சாலையில் நிலச்சரிவு: வீட்டின் சுற்றுச்சுவர் மண்ணில் புதைந்தது

கூடலூர் பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளிக்கிழமை இரவு ஓவேலி சாலையில் வீட்டின் சுற்றுச்சுவர் மண்ணில் புதைந்தது.


கூடலூர் பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளிக்கிழமை இரவு ஓவேலி சாலையில் வீட்டின் சுற்றுச்சுவர் மண்ணில் புதைந்தது.
நீலகிரி மாவட்டம், கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதியில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.
வெள்ளிக்கிழமை இரவு சுமார் 12 மணியளவில் பெய்த மழையில் கூடலூர்-ஓவேலி சாலையில் கெவிப்பாறா லாக்லாண்ட் பகுதியில் உள்ள ஜெயா என்பவரது வீட்டின் சுற்றுச்சுவர் முற்றிலும் மண்ணில் புதைந்துள்ளது.
தொடர்ந்து கன மழை பெய்வதால் மேலும் பாதிப்புகள் ஏற்படலாம் என மக்கள் கவலை அடைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com