பா.ஜ.க. சார்பில் கேரள மாநிலத்துக்கு நிவாரணப் பொருள்கள்

வால்பாறை மண்டல பா.ஜ.க. சார்பில் கேரள மாநிலத்துக்கு நிவாரணப் பொருள்கள் சேகரித்து வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

வால்பாறை மண்டல பா.ஜ.க. சார்பில் கேரள மாநிலத்துக்கு நிவாரணப் பொருள்கள் சேகரித்து வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மழை காரணமாக கேரள மாநிலத்தில் அதிக அளவில் வெள்ள சேதம் ஏற்பட்டுள்ளது. ஏராளமான மக்கள் வீடு, பொருள்களை இழந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே வால்பாறை பகுதியில் வசிப்பவர்களிடம் நிதி, துணி, அரிசி, மளிகை உள்ளிட்ட பொருள்களை சேகரித்து சில தினங்களில் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, வால்பாறையில் சனிக்கிழமை நடைபெற்ற கட்சி நிர்வாகிகளின் அவசர ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்திருப்பதாக அக்கட்சியின் மண்டலப் பொதுச் செயலாளர் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com