கேரளம் மற்றும் கர்நாடகத்தில் இருந்து வரும் வாகனங்களைக் கண்காணிக்க தமிழக எல்லைகளில் கேமராக்கள் பொருத்தும் பணி காவல் துறை சார்பில் நடைபெறுகிறது.
நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதியில் கேரள மாநிலத்தின் மலப்புரம் மற்றும் வயநாடு மாவட்டங்களின் 5 எல்லைகள், கர்நாடக மாநிலத்தின் ஒரு எல்லை என மொத்தம் ஆறு எல்லைகள் உள்ளன. குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் எளிதில் எல்லையைக் கடந்து சென்றுவிடுகின்றனர்.
மூன்று மாநில எல்லையில் கூடலூர் உள்ளதால் வெளி மாநிலங்களிலிருந்து ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன.
இந்த வாகனங்களைக் கண்காணிக்க எல்லைகளில் அதி நவீன கேமராக்களைப் பொருத்தி சென்சார் மூலம் கண்காணிக்க காவல் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.