மச்சிக்கொல்லியில் 18-இல் கைப்பந்துப் போட்டி

கூடலூரை அடுத்துள்ள மச்சிக்கொல்லி மட்டம் பகுதியில் தென்னிந்திய அளவிலான கைப்பந்துப் போட்டி வரும் 18-ஆம் தேதி நடைபெறுகிறது.

கூடலூரை அடுத்துள்ள மச்சிக்கொல்லி மட்டம் பகுதியில் தென்னிந்திய அளவிலான கைப்பந்துப் போட்டி வரும் 18-ஆம் தேதி நடைபெறுகிறது.
மட்டம் பகுதியிலுள்ள யுவஜன சங்கம் சார்பில் நடைபெறும் நான்காவது ஆண்டு கைப்பந்துப் போட்டியை கூடலூர் டி.எஸ்.பி. ரவிசங்கர் துவக்கி வைக்கிறார். கூடலூர் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.திராவிடமணி சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பரிசுகளை வழங்க உள்ளார். தமிழ்நாடு, கேரளம், கர்நாடகத்திலுள்ள சிறந்த அணிகள் இந்தப் போட்டியில் பங்கேற்க உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை மட்டம் யுவஜன சங்க நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com