குன்னூர் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியில் இம்மாதம் 24-ஆம் தேதி நடைபெற உள்ள சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று பயனடைய வேண்டுமாறு மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நீலகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆகியவை இணைந்து சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை குன்னூர் வண்டிசோலை பகுதியிலுள்ள பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியில் இம்மாதம் 24-ஆம் தேதி நடத்தத் தீர்மானித்துள்ளது.
இம் முகாமில் 5-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பள்ளிக் கல்வி
முடித்தோர், டிப்ளமோ, ஐ.டி.ஐ. முடித்தவர்கள், பட்டதாரிகள் மற்றும் பொறியியல் பட்டம் பெற்றோரும், தையல் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு திறன் பயிற்சி பெற்றவர்களும் பங்கேற்று பணிவாய்ப்பைப் பெறலாம். முகாமில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 50 நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.
எனவே, நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்களும், பொதுமக்களும் இம் முகாமில் பங்கேற்றுப் பயனடையலாம். இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு வேலை அளிக்கும் நிறுவனங்களும், வேலை நாடுநர்களும் 0423-2444044 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.