கூடலூரை அடுத்துள்ள சிவன்மலையில் சிவராத்திரி விழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள நம்பாலக்கோட்டையில் உள்ள சிவன்மலையில் காலை 6 மணிக்கு சிவராத்திரி விழா தொடங்கியது. மாலை 4 மணிக்கு மலையைச் சுற்றி பக்தர்கள் கிரிவலம் சென்று, மலை உச்சியில் உள்ள சிவலிங்கத்துக்கு பூஜைகள் செய்யத் தொடங்கினர். மாலை 6.30 மணிக்குத் தொடங்கிய யாகசால பூஜை நள்ளிரவு வரை நடைபெற்றது. தொடர்ந்து லட்சார்ச்சனைகளும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன.
உலக அமைதிக்காகவும், மக்கள் மற்றும் ஊர்நலனுக்காகவும் கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது. சிவராத்திரி விழா நிகழ்ச்சிகள் புதன்கிழமை காலை 5 மணிக்கு நிறைவு பெற்றது. பல பகுதிகளிலிருந்தும் வந்த பக்தர்கள் இரவு முழுவதும் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர்.