வால்பாறையில் வீட்டுக்குள் புகுந்து வனத் துறை ஊழியரைத் தாக்கியதோடு கொலை மிரட்டல் விடுத்ததாக 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
மானாம்பள்ளி வனச் சரகத்தில் வேட்டைத் தடுப்புக் காவலராக பணிபுரிபவர் மாலிக்கனி. இவர், வால்பாறை அண்ணா நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அதே பகுதியில் வசிக்கும் சிலர் கடந்த சில தினங்களுக்கு முன் அப்பகுதியில் உள்ள ஆற்றில் ப்ளீசிங் பவுடர் தூவி மீன் பிடித்தனர். தகவலறிந்து அப்பகுதிக்கு சென்ற வனத் துறையினர் அவர்களைக் கண்டித்து அனுப்பியுள்ளனர். மாலிக்கனி கொடுத்த தகவலின்பேரிலேயே வனத் துறையினர் வந்ததாக கருதிய அந்த நபர்கள் மாலிக்கனியின் வீட்டுக்குள் புகுந்து தாக்கியதோடு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இதில் பலத்த காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் அளித்த புகாரையடுத்து வால்பாறை போலீஸார் வழக்குப் பதிவு செய்து அண்ணா நகரைச் சேர்ந்த மணிகண்டன் (34), கண்ணன் (30), சபரீஸ்வரன் (21), லோகு (35) ஆகிய 4 பேரைக் கைது செய்தனர்.