மஞ்சூர் அருகே பிக்கட்டி பேரூராட்சிக்கு உள்பட்ட தக்காபர் பாபா நகரில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகாமிற்கு, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியர் மகேஸ்வரி தலைமை வகித்தார்.இதில், ஓய்வூதியம், ஆதார் அட்டை பெயர் திருத்தம், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் , நீக்கல், ஸ்மார்ட் கார்டுக்கு விண்ணப்பித்தல் உள்ளிட்ட 20 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெற்றப்பட்டன. அனைத்து மனுக்களும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதில், வட்ட வழங்கல் அலுவலர் மகேஸ்வரி, வருவாய் ஆய்வாளர் ஜெயந்தி, கிராம நிர்வாக அலுவலர் கலாமணி உள்பட அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.