பொங்கல் விடுமுறை: சிம்ஸ் பூங்காவில் குவிந்த மக்கள்

பொங்கல்  விடுமுறையையொட்டி  குன்னூர்  சிம்ஸ் பூங்காவுக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் திங்கள்கிழமை வருகை தந்தனர்.

பொங்கல்  விடுமுறையையொட்டி  குன்னூர்  சிம்ஸ் பூங்காவுக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் திங்கள்கிழமை வருகை தந்தனர்.
  நீலகிரி மாவட்டத்தில் இரவு நேரத்தில் மிகுந்த பனிப் பொழிவும்,  பகல் நேரத்தில்  மிதமான வெப்பநிலையும்  காணப்படுகிறது. இத்தகைய ரம்மியமான காலநிலையை அனுபவிக்கும் விதமாக குன்னூர், கோத்தகிரியில் உள்ள  சுற்றுலா தலங்களான  டால்பின் நோஸ்,  லேம்ஸ்ராக், சிம்ஸ் பூங்கா, காட்டேரிப் பூங்கா,  கொடநாடு காட்சி முனை  உள்ளிட்ட இடங்களைக் கண்டு ரசிக்க  சுற்றுலாப் பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
  தற்போது பூங்காக்களில்  பெருமளவு மலர்கள் இல்லை என்றாலும்கூட,  இந்தக் காலநிலையினை  அனுபவிக்கும் விதமாக ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com