கூடலூர் நூலகக் கட்டடத்தின் கான்கிரீட் கூரை சேதமடைந்துள்ளதால் நூலகத்துக்குள் மழைநீர் கசிவு ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், கூடலூரில் உள்ள நூலகத்தின் கான்கிரீட் கூரை சேதமடைந்துள்ளது. இதனால் தற்போது பெய்யும் தொடர் மழையால் நூலகத்துக்குள் மழைநீர் கசிந்து வருகிறது.
தொடர்ந்து பலத்த மழை பெய்யும்போது நூலகம் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதே நிலை நீடித்தால் நூலகத்தில் உள்ள அரிய, பழமையான புத்தகங்கள் சிதைந்து போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் நூலகக் கட்டடத்தை விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வாசகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.