ஒடிஸா மாநில வன அலுவலர்களுக்கு நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் ஞாயிற்றுக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.
ஒடிஸா மாநிலத்தில் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட வனச் சரக அலுவலர்கள் 53 பேருக்கு முதுமலை புலிகள் காப்பகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது. இங்குள்ள தெப்பக்காடு யானைகள் முகாமில் புலிகள் காப்பக உதவிக் கள இயக்குநர் செண்பகப்பரியா தலைமையில் களப் பயிற்சி அளிக்கப்பட்டது. யானைகள் முகாமில் யானைகளைப் பராமரிப்பது பற்றி கால்நடை மருத்துவர் மனோகரன் பயிற்சி அளித்தார். ஒடிஸா மாநிலத்திலிருந்து வந்த மாவட்ட வன அலுவலர் கங்காதர், முதுமலை வனச் சரக அலுவலர் தயானந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.