கோத்தகிரி கட்டபெட்டு குடிமனை பகுதியில் தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும் என்று இப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கட்டபெட்டு, குடிமனை பகுதியில் 80-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப் பகுதியில் உள்ள சாலையில் பாதுகாப்பு தடுப்பு இல்லாததால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதனால் இங்குள்ள குடியிருப்புகள் சேதம் அடைவதுடன். உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது.
எனவே, குடிமனை கோயிலில் இருந்து கொண்டை ஊசி வளைவு வரை பாதுகாப்பு தடுப்புச் சுவர் அமைக்க நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.