நடைபெற்றுவரும் 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கணிதம், விலங்கியல் பாடத் தேர்வுகளை நீலகிரி மாவட்டத்தில் 74 பேர் எழுதவில்லை.
நீலகிரி மாவட்டத்தில் தேர்வெழுதத் தகுதியான 3,586 பேரில் 3,512 பேர் மட்டுமே பங்கேற்றனர்; 74 பேர் தேர்வெழுதவில்லை. இவர்களில் கணிதத் தேர்வெழுத வேண்டிய 2,278 பேரில் 2,248 பேர் மட்டுமே தேர்வெழுதியுள்ளனர்; 30 பேர் தேர்வெழுதவில்லை.
அதேபோல விலங்கியல் பாடத்தில் தேர்வெழுத வேண்டிய 1,308 பேரில் 1,264 பேர் மட்டுமே தேர்வெழுதியுள்ளனர்; 44 பேர் தேர்வெழுதவில்லை. தனித்தேர்வர்கள் எவரும் இத்தேர்வுகளுக்காக பதிவு செய்யவில்லை. மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்புச் சலுகைகளைப் பெற்று 22 பேர் தேர்வெழுதினர்.