மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து த.மா.கா. இளைஞரணி சார்பில் கண்டன ஆர்பாட்டம், குன்னூர், வி.பி. தெருவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நகரத் தலைவர் எஸ்.ஆனந்தகுமார் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் சந்திரன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக கோவை தங்கம், மாநில இளைஞரணி பொறுப்பாளர் சரத், மாவட்ட இளைஞரணி தலைவர் விசு ஆகியோர் கலந்து கொண்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி-க்குள் கொண்டுவர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.