ஓவேலி பேரூராட்சியில் டெங்கு விழிப்புணர்வு முகாம்

கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பேரூராட்சி சார்பில் டெங்கு விழிப்புணர்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பேரூராட்சி சார்பில் டெங்கு விழிப்புணர்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
ஓவேலி பேரூராட்சி சார்பில் பெரியார் நகர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற டெங்கு விழிப்புணர்வு முகாமுக்கு செயல் அலுவலர் எம்.என்.வேணுகோபால் தலைமை வகித்தார். பார்வுட் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் லோகேஷ், சுகாதார ஆய்வாளர் மோகன்குமார் ஆகியோர் டெங்கு காய்ச்சல் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பாதிக்கப்பட்டவர்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. 
பாதுகாக்கப்பட்ட குடிநீர் நிலைகள், குடியிருப்புப் பகுதிகள், கழிவுநீர்க் கால்வாய்களின் தூய்மைப் பணிகள் குறித்து பேரூராட்சிப் பணியாளர்கள் செயல்விளக்கம் அளித்தனர். 
பள்ளி ஆசிரியர்கள், பேரூராட்சியின் அனைத்து நிலை பணியாளர்கள், பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் இதில் கலந்துகொண்டனர். நிறைவாக பேரூராட்சி தலைமை எழுத்தர் ஹரிதாஸ் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com