கோத்தகிரியில் தேசிய நூலக வாரவிழாவை முன்னிட்டு, பள்ளி மாணவ, மாணவியருக்கு, அறிவுத்திறன் போட்டி புதன்கிழமை நடத்தப்பட்டது.
கோத்தகிரி கிளை நூலகம் சார்பில் நடத்தப்பட்ட இப் போட்டியில், கட்டுரை, பேச்சு, ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டன.
போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு இந்த வார இறுதியில் நடைபெறும் நூலக வார இறுதி விழாவில் பரிசுகள் வழங்கப்பட உள்ளன. கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த 5 பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.