கோத்தகிரி அரசு மருத்துவமனையின் சித்த மருத்துவப் பிரிவு சார்பில், அரசு மருத்துவர் ரஞ்சித் முன்னிலையில், மாணவ, மாணவியருக்கு நிலவேம்புக் குடிநீர் புதன்கிழமை வழங்கப்பட்டது.
கோத்தகிரியில் டெங்கு, பன்றிக் காய்ச்சல் வராமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மருத்துவர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும் பொது மக்களுக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்கப்பட்டு துண்டுப் பிரசுரங்களும் விநியோக்கிக்கப்பட்டன.
இதில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பயனடைந்தனர். நகர்ப்புறங்களில் நிலவேம்புக் குடிநீர் வழங்கப்படுவது போல கிராமப்புறங்களில் உள்ள பள்ளி மாணவ, மாணவியருக்கும் வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.