சமூக நீதிக்கான பெரியார் விருது பெற அழைப்பு

சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
இதுதொடர்பாக மாவட்ட  ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளதாவது:
ஆண்டுதோறும் சமூக நீதிக்காகப் பாடுபடுபவர்களை  சிறப்பு செய்வதற்காக சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. 
இவ்விருது பெறுவோருக்கு ரூ. 1 லட்சம் பொற்கிழியும்,  ஒரு பவுன் தங்கப்பதக்கமும்,  தகுதியுரையும் வழங்கப்பட்டு வருகிறது. இதில், 2018ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது வழங்குவதற்கு உரிய விருதாளர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.  
எனவே, சமூக நீதிக்காகப் பாடுபட்டு மக்களின் வாழ்க்கைத்தரம் உயர மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் சாதனைகள் ஆகியவற்றுடன் விண்ணப்பதாரரின் பெயர், சுய விவரம் மற்றும் முழு முகவரியுடன் அக்டோபர் 31ஆம் தேதிக்குள் நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com