கூடலூர் நகராட்சியின் அலுவலக ஆவணங்களை வெளியே கொடுத்தது தொடர்பாக இரண்டு பணியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கூடலூர் நகராட்சியில் பணியாற்றி வரும் சித்ரா, மகேஷ்வரி ஆகிய இரு பணியாளர்கள் அலுவலக ஆவணங்களை வெளி நபர்களுக்குக் கொடுத்துள்ளனர்.
இதனால், அவர்கள் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
பல்வேறு நிர்வாக காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நகராட்சி ஆணையாளர் பார்வதி தெரிவித்துள்ளார்.