கூடலூர் தோட்டத் தொழிலாளர் தொழிற்பயிற்சி மையத்தில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தொழிற்பயிற்சி மையத்தில் 1982 முதல் 2000 ஆண்டு வரை படித்த மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஐ.என்.டி.யூ.சி. தலைவர் கே.பி.முகமது தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக நடேசன் பாக்கியம் கலந்துகொண்டார்.
தொழிற்பயிற்சி மைய முதல்வர் ஷாஜி எம்.ஜார்ஜ், ஆசிரியர்கள், முன்னாள் ஆசிரியர்கள், மாணவர்கள் இதில் கலந்துகொண்டனர். முன்னாள் மாணவர்கள் சார்பில் தொழிற்பயிற்சி மையத்திற்கு 150 இருக்கைகளும், பீரோவும் வழங்கப்பட்டன.