150 ஆவது காந்தி ஜயந்தி: கட்டுரை, ஓவியப் போட்டியில் பங்கேற்க அழைப்பு

மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மஞ்சூர் காந்தி சேவா அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும் கட்டுரை

மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மஞ்சூர் காந்தி சேவா அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும் கட்டுரை, ஓவியப் போட்டியில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மஞ்சூர் காந்தி சேவா அறக்கட்டளைச் செயலாளர் போஜன் வெளியிட்டுள்ள அறிக்கை:
வரும் அக்டோபர் 2ஆம் தேதி 150ஆவது காந்தி ஜயந்தி விழா கொண்டாடப்படுகிறது. 
இதை முன்னிட்டு மஞ்சூர் காந்திசேவா அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு "இன்றைய சூழ்நிலையில் மகாத்மாவின் கொள்கையில் உங்களை கவர்ந்தது' என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டியும், ஓவியப் போட்டியும் நடைபெற உள்ளது.
பெண்களுக்குகோலப்போட்டி நடத்தப்படும். கட்டுரைப் போட்டியில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள் 2 பக்கங்களுக்கு குறையாமல் எழுதி தாங்கள் படிக்கும் பள்ளித் தலைமையாசிரியரின் கையொப்பத்துடன் பள்ளி முகவரி, படிக்கும் வகுப்பு ஆகிய விவரங்களுடன் அனுப்ப வேண்டும். ஓவியப் போட்டியில் பங்கேற்போர், மகாத்மா காந்தி குறித்த ஓவியங்களை வரைந்து அனுப்பலாம். 
கோலப் போட்டியில் கலந்து கொள்ளும் இல்லத்தரசிகள் தங்களது இருப்பிடங்களில் இருந்தே கோலங்களை வரைந்து அனுப்பலாம். 
படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி செயலாளர், காந்தி சேவா அறக்கட்டளை, மஞ்சூர், குந்தாஅஞ்சல், நீலகிரி மாவட்டம். படைப்புகளை அனுப்ப கடைசி நாள்25.9.2018 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com