கேரளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் நீலமலை இலக்கிய கூடல் அமைப்பு சார்பில் நிவாரண நிதி செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்டது.
நீலமலை இலக்கிய கூடல் அமைப்பு சார்பில் கவியரங்கம் நடத்தி அதன்மூலம் சேகரிக்கப்பட்ட தொகை ரூ. 40 ஆயிரத்தை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவிடம் அதன் நிர்வாகிகள் வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் நாகராஜன், சோ.கந்தசாமி, வேலு ராஜேந்திரன், சாஹிரா, திருச்செல்வி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.