உதகை கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா சனிக்கிழமை தொடக்கிவைத்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் பேசியதாவது:
இந்த ஆண்டில் தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனையாக கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீதம் சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படும். கடந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையின்போது உதகை விற்பனை நிலையத்தில் ரூ. 91.88 லட்சம் விற்பனை நடைபெற்றுள்ளது. இந்த ஆண்டில் விற்பனைக் குறியீடாக ரூ. 110 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார். இந்நிகழ்ச்சியில், கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் சுரேஷ்குமார், மண்டலத் துணை மேலாளர் மோகன்குமார், உதகை விற்பனை நிலைய மேலாளர் சபீனா நாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.