உதகையில் இன்று கருணாநிதிக்கு புகழஞ்சலி

நீலகிரி மாவட்ட திமுக சார்பில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்குப் புகழஞ்சலி செலுத்தும் வகையில் புகழ் வணக்கம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

நீலகிரி மாவட்ட திமுக சார்பில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்குப் புகழஞ்சலி செலுத்தும் வகையில் புகழ் வணக்கம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இது தொடர்பாக நீலகிரி மாவட்ட திமுக செயலர் பா.மு.முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சமூக நீதிக்காக இறுதி வரை உழைத்தவர் கருணாநிதி. அவரது புகழுக்குப் புகழ் சேர்க்கும் வகையில், உதகையில் உள்ள ஒய்.டபிள்யூ.சி.ஏ. ஆனந்தகிரி கூட்ட அரங்கில்  திங்கள்கிழமை பகல் 2 மணிக்குப் புகழஞ்சலிக் கூட்டம்  நடைபெற உள்ளது. 
இதில், திமுக கொள்கைப் பரப்புச் செயலர் திருச்சி என்.சிவா, புலவர் மா.ராமலிங்கம், கவிஞர் நந்தலாலா ஆகியோர் கலந்து கொள்கின்றனர் என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com