நீலகிரி மாவட்ட திமுக சார்பில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்குப் புகழஞ்சலி செலுத்தும் வகையில் புகழ் வணக்கம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இது தொடர்பாக நீலகிரி மாவட்ட திமுக செயலர் பா.மு.முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சமூக நீதிக்காக இறுதி வரை உழைத்தவர் கருணாநிதி. அவரது புகழுக்குப் புகழ் சேர்க்கும் வகையில், உதகையில் உள்ள ஒய்.டபிள்யூ.சி.ஏ. ஆனந்தகிரி கூட்ட அரங்கில் திங்கள்கிழமை பகல் 2 மணிக்குப் புகழஞ்சலிக் கூட்டம் நடைபெற உள்ளது.
இதில், திமுக கொள்கைப் பரப்புச் செயலர் திருச்சி என்.சிவா, புலவர் மா.ராமலிங்கம், கவிஞர் நந்தலாலா ஆகியோர் கலந்து கொள்கின்றனர் என்று தெரிவித்துள்ளார்.