கூடலூர் சிவன்மலையில் பௌர்ணமி கிரிவலம்

நீலகிரி மாவட்டம்,  கூடலூரை அடுத்துள்ள நம்பாலக்கோட்டை சிவன்மலையில் பௌர்ணமி கிரிவலம் திங்கள்கிழமை நடைபெற்றது. 

நீலகிரி மாவட்டம்,  கூடலூரை அடுத்துள்ள நம்பாலக்கோட்டை சிவன்மலையில் பௌர்ணமி கிரிவலம் திங்கள்கிழமை நடைபெற்றது. 
இதையொட்டி,  பல்வேறு பகுதியிலிருந்து வந்த பொதுமக்கள் ஒன்று கூடி சிவன்மலை அடிவாரத்திலிருந்து சுமார் ஆறு கிலோ  மீட்டர் தொலைவுக்கு கிரிவலம் சென்றனர். 
கிரிவலத்தைத் தொடர்ந்து மலை உச்சியிலுள்ள சிவலிங்கத்துக்கு சிறப்பு ஆராதனைகள் மற்றும் அபிஷேகம் நடைபெற்றன.  அதைத் தொடர்ந்து கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது. 
இதற்கான ஏற்பாடுகளை சிவன்மலை வளர்ச்சி மற்றும் சமூக நல அறக்கட்டளை நிர்வாகிகள் கேசவன், நடராஜன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com