யானை தாக்கியதில் ஆதிவாசிப் பெண் காயம்

கோத்தகிரி அருகே யானை தாக்கியதில் ஆதிவாசிப் பெண் படுகாயமடைந்தார்.

கோத்தகிரி அருகே யானை தாக்கியதில் ஆதிவாசிப் பெண் படுகாயமடைந்தார்.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே செம்மநாரை ஆதிவாசி கிராமத்தில் வசித்து வருபவர் குமார். இவரது மனைவி சரசு (32). இவர் தேயிலை எஸ்டேட்டில் வேலை செய்வதற்காக திங்கள்கிழமை சென்று கொண்டிருந்தார். 
அப்போது மறைவில் இருந்த  காட்டு யானை அவரைத் தாக்கியுள்ளது.  இதைக் கண்டு அருகிலிருந்தவர்கள் கூச்சலிடவே யானை காட்டுப் பகுதிக்குள் சென்றது. இதைத் தொடர்ந்து,  சரசுவை மீட்ட  கிராம மக்கள் கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com