பல்லடத்தில் குரூப் 4 பயிற்சி வகுப்பு தொடக்கம்

அம்பேத்கர் கல்வி, வேலைவாய்ப்பு பயிற்சி மையம் சார்பில் குரூப் 4 தேர்வுக்கான பயிற்சி வகுப்பு தொடக்க விழா பல்லடத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

அம்பேத்கர் கல்வி, வேலைவாய்ப்பு பயிற்சி மையம் சார்பில் குரூப் 4 தேர்வுக்கான பயிற்சி வகுப்பு தொடக்க விழா பல்லடத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு பயிற்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் ச.நந்தகோபால் தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் பாலு வரவேற்றார். இதில், குரூப் 4 போட்டித் தேர்வுக்குப் பயிற்சி பெறும் மாணவ, மாணவிகள் உள்பட 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இவ்விழாவில், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் கே.தங்கவேல் துவங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

விழாவில், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் யு.கே.சிவஞானம், அம்பேத்கர் கல்வி, வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் மாநில துணை ஒருங்கிணைப்பாளர் கே.கணேஷ், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் முத்துக்குமாரவேல், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் ஆர்.குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com