26-இல் படைவீரர் குறைதீர் முகாம்

படைவீரர்களுக்கான குறைதீர் முகாம் வரும் 26-ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

படைவீரர்களுக்கான குறைதீர் முகாம் வரும் 26-ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்கள், பணியில் உள்ள படை வீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்த குடும்பத்தினருக்கான சிறப்பு குறைதீர் முகாம், வரும் ஏப்ரல் 26-ஆம் தேதி காலை 11 மணிக்கு, மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில், மாவட்ட ஆட்சியர் ச.ஜெயந்தி தலைமையில் நடைபெறவுள்ளது.
எனவே, திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், அவரைச் சேர்ந்தோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு, தங்களது குறைகளை விண்ணப்பம் வாயிலாக (இரட்டைப் பிரதிகளில்) சமர்ப்பித்து பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com