இலக்கிய மன்றத் தொடக்க விழா

உடுமலையை அடுத்த மடத்துக்குளம் ஜே.எஸ்.ஆர். மேல்நிலைப் பள்ளியில் தமிழ் இலக்கிய மன்றத் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.

உடுமலையை அடுத்த மடத்துக்குளம் ஜே.எஸ்.ஆர். மேல்நிலைப் பள்ளியில் தமிழ் இலக்கிய மன்றத் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.
இவ்விழாவுக்குப் பள்ளித் தலைவர் சி.ராஜ்குமார் தலைமை வகித்தார். செயலர் இரா.கார்த்திகே யன் முன்னிலை வகித்தார். ஓய்வுபெற்ற தமிழ் ஆசிரியர் ஆறுமுகம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தமிழ் திறன் வளர்ச்சி என்ற தலைப்பில் பேசினார். விழாவில், நாடகங்கள், கவிதைகள் ஆகியவற்றை எவ்வாறு இயற்றுவது என்பது குறித்து மாணவர்களுக்குப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
தலைமை ஆசிரியர் ஆ.சரவணகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியர் சக்திபிரியா நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com