பல்லடத்தில் அரசுப் பேருந்து மோதியதில் எலக்ட்ரீஷியன் வியாழக்கிழமை உயிரிழந்தார்.
நீலகிரி மாவட்டம், பந்தலூர் பகுதியைச் சேர்ந்தவர் ஏசையன் மகன் அந்தோணி (55). இவர் திருப்பூர் மாவட்டம், பல்லடம், கொசவம்பாளையம் சாலையில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி எலக்ட்ரீஷியன் வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் அந்தோணி, பல்லடம் - கரடிவாவி சாலையில் வியாழக்கிழமை நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அரசுப் பேருந்து, அந்தோணி மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அந்தோணி பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தார். இதுகுறித்து பல்லடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.