உடுமலையில் ஆதித் தமிழர் பேரவை சார்பில் அம்பேத்கர் நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.
மத்தியப் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆதித் தமிழர் பேரவையினர் அம்பேத்கர் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர். அப்போது அவர்கள், மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் நிலையை ஒழிக்க வேண்டும். ஒப்பந்த துப்புரவுப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண் டும். அருந்ததிய மாணவ, மாணவிகளுக்கு அரசு சலுகைகள் உடனுக்குடன் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதில், தா.பெரியார்தாசன்(வழக்குரைஞர் அணி) மாவட்டச் செயலா ளர் அர்ஜுனன், நகரச் செயலாளர் வெள்ளிமலை உள்ளிட்ட பலர் கலந்து கொ ண்டனர். தமிழர் பண்பாட்டுப் பேரவை சார்பிலும் அம்பேத்கார் நினைவு தினம் உடுமலையில் அனுசரிக்கப்பட்டது.
அண்ணல் அம்பேத்கர் தள்ளுவண்டி சிறு வியாபாரிகள் பொ து நலச் சங்கம் சார்பில் அம்பேத்கர் நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்க ப் பட்டது. இதையொட்டி, மத்திய பேருந்து நிலையம் எதிரில் வைக்கப்பட்டிருந்த அம்பே த்கர் உருவப் படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டு, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. சங்கத் தலைவர் கோ.பாபு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் பி.குணசேகரன், டி.முத்துகுமார் உள்ளிட்ட 25 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
காங்கயத்தில்... டாக்டர் அம்பேத்கரின் நினைவு நாளை முன்னிட்டு, காங்கயம் பேருந்து நிலையம் அருகே அவரது உருவப் படத்துக்கு புரட்சிகர இளைஞர் முன்னணி அமைப்பினர். புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.