இருசக்கர வாகனத்துக்கு தீ வைப்பு

திருப்பூரில் பாஜக நிர்வாகியின் மகனது இருசக்கர வாகனத்துக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

திருப்பூரில் பாஜக நிர்வாகியின் மகனது இருசக்கர வாகனத்துக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியது:
திருப்பூர், விஜயாபுரம் அங்காளம்மன் நகர் முதல் வீதியைச் சேர்ந்தவர் நடராஜன். இவர்,  பாரதிய ஜனதா கட்சியின் அமைப்பு சாரா தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்டச் செயலாளராக உள்ளார். இவரது மகன்  பரமசிவம் (32).   
இவர்,  வழக்கம்போல் புதன்கிழமை இரவு தனது இருசக்கர வாகனத்தை வீட்டுக்கு வெளியே நிறுத்திவைத்துள்ளார்.  நள்ளிரவில் திடீரென சப்தம்  கேட்டு அவர் வெளியே வந்து பார்த்தபோது,  இருசக்கர வாகன தீப்பிடித்து எரிவதை தெரியவந்தது. தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.
  இது குறித்து  திருப்பூர் ஊரக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com